திங்கள்சந்தை, ஜுலை 5 –
இரணியல் பகுதியை சேர்ந்தவர் விஜய் (29) கட்டிடத் தொழிலாளி. நேற்று இவர் முட்டம் சாலையில் உள்ள ஒரு பழைய வீட்டை சக தொழிலாளர்களுடன் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரம் அங்கு மறைந்திருந்த விஷப்பூச்சி விஜய்யை கடித்ததில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக சக தொழிலாளர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தார். இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.