சென்னை, செப். 06 –
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மகளிர் நலவாழ்வு மையம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இம்மையத்தை ஷாலினி அஜித்குமார் தொடக்கி வைத்தார். காவேரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை ஆலோசகர் மருத்துவர். ஸபீஹா கூறியதாவது: மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் மருத்துவம், மார்பக ஆரோக்கியம், சிறுநீரியல், மற்றும் மூலம், பௌத்திரம், ஆசனவாய் வெடிப்பு போன்ற இடுப்புக்கூடு மற்றும் ஆசனவாய் சார்ந்த அறுவை சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற பெண் மருத்துவர்களைக் கொண்ட பல்துறை மருத்துவக் குழு இங்கு சேவையாற்றுகிறது.
மேலும், வளரிளம் பருவத்தினருக்கான சிறப்புத் திட்டங்கள், பிசிஓஎஸ் ஃபைப்ராய்டு கட்டிகள், அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு, மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்திற்கான பராமரிப்பு, சிறுநீர் அடக்க இயலாமைக்கான சிகிச்சைப்பிரிவு மற்றும் தடுப்பூசிகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இம்மையத்தின் கீழ் வழங்கப்படும். இந்த மையம், மகளிருக்கு மேற்கூறிய அனைத்துப் பிரிவுகளிலும் சரியான நேரத்தில் சிறப்பு கவனத்துடன் ஆலோசனையும், சிகிச்சையும் கிடைப்பதை உறுதி செய்கிறது என்றார்.
இந்த மகளிர் நலவாழ்வு மையத்தின் மருத்துவக் குழுவில் டாக்டர் மீனா உமாசந்தர் (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் ஸபீஹா T S (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் வைஷ்ணவி லக்ஷ்மன் (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் – சிறுநீர்ப்பை மருத்துவம்), டாக்டர் அனிதா S (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் ஸ்ருதி ஸ்ரீதர் (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் அனு ரமேஷ் (முதுநிலை ஆலோசகர், சிறுநீர் பாதையியல்), டாக்டர் சாந்தி (பொது அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் அருள்மொழி மங்கை (ஆலோசகர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை), மற்றும் டாக்டர் கீர்த்தி (இணை ஆலோசகர், மார்பக அறுவை சிகிச்சை) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



