தென்தாமரைகுளம், ஏப். 18 –
கன்னியாகுமரி மாவட்டம் ஆமணக்கன் விளை கடற்கரையில் அமைந்துள்ள வாவைநற்பதியில் அய்யா வைகுண்ட சுவாமியின் துவையல் தவசை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை துவையல் தவசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விழா பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி தலைமையில் நடைபெற்றது. தர்மகத்தா செ.பாலசந்தர், தர்மகத்தா து.பாலசுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆதித்தன், நாகராஜன், சென்னை முருகன் ஆகியோர் துவையல் தவசு பற்றி பேசினர். வி.கே.புரம் சதீஷ்குமார் உட்பட அய்யாவழி அன்புக்கொடி மக்கள் பலர் கலந்து கொண்டனர். அய்யா வைகுண்டசாமியின் ஆகம மந்திரம் சொல்லப்பட்டது. தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளும் அன்னதர்மமும் நடந்தன. ஏற்பாடுகளை தர்மகத்தா து.பால சுரேஷ் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.



