By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டால் சிறப்பாக திட்டங்கள் பொது மக்களை சென்று அடையும் – நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டால் சிறப்பாக திட்டங்கள் பொது மக்களை சென்று அடையும் – நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்
வேலூர்

அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டால் சிறப்பாக திட்டங்கள் பொது மக்களை சென்று அடையும் – நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்

Last updated: July 24, 2025 6:48 pm
July 24, 2025 5 Views
Share
SHARE

வேலூர், ஜூலை 24 –

எடப்பாடி பழனிச்சாமி சும்மா ஏதாவது ஊர் ஊராக போய் பேசிக் கொண்டிருக்கின்றார்; நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, கூட்டுறவு வங்கி கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட நல திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு 1336 பயனாளிகளுக்கு ரூபாய் 22 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மேயர் சுஜாதா ஆனந்தகுமார், வேல்முருகன் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் சரவணன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இறுதியாக உரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இங்கு நாலாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைவிட மகிழ்ச்சிகரமான செய்தி வேறு ஒன்றும் இருக்க முடியாது. என்னுடைய 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒரே இடத்தில் இத்தனை பேருக்கு பட்டா கொடுப்பது இதுதான் முதல் முறையாகும்.

குடிசையில் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் இங்கு மழையிலே நனைந்து வெயிலில் காய்ந்து கொண்டிருந்த 4000 ஏழை மக்களுக்கு வீடு கொடுப்பதை விட மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றுமில்லை. இன்று 4000 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்குகின்றோம். இதை செய்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு புகழ் இருக்கும். ஆட்சி நடத்துகின்றவர்களும் அரசை நிர்வாகிக்கும் அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் சிறப்பாக செயல்பட முடியும்.

தமிழக முதலமைச்சர் அவர்களின் எண்ணத்தை அறிந்து அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர். அதற்காக அரசு அதிகாரிகளை பாராட்டுகின்றேன். நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் தளபதி அவர்கள் எல்லா திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார். முதலமைச்சருக்கும் உங்கள் வாழ்த்துக்களை சொல்ல வேண்டும் என்று இந்நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது: காவிரி கோதாவரி திட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததால் தான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு காவிரி, கோதாவரி பற்றி சுத்தமா எடப்பாடிக்கு எதுவும் தெரியாது.

உச்ச நீதிமன்றத்தின் காவிரி தீர்ப்புக்கு பிறகு இதன் நிலை என்ன என்பது குறித்து எடப்பாடிக்கு ஏதாவது தெரியுமா? சும்மா ஏதாவது ஊர் ஊராக போய் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. எடப்பாடி பழனிச்சாமி பாய் பாய் ஸ்டாலின் என ஹேஷ்டேங் போட்டுள்ளது குறித்து கேட்டதற்கு அந்த அளவுக்கு வந்து விட்டாரா? என சிரித்தார். அன்வர் ராஜா வந்ததை தொடர்ந்து அதிமுகவினர் திமுகவுக்கு வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு எனக்கு தெரியாது என பதில் அளித்தார்.

சீமான் மற்றும் விஜய்க்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளது குறித்து கேட்டதற்கு கடை விரித்த உடனே நாலு பேர் வரத்தான் செய்வான். கடையை விரித்து வைத்துக் கொண்டு யாரும் வரவில்லை என்றால் என்ன செய்வது வாங்க வாங்க சார் என்று அழைக்கத்தான் செய்வார்கள் என்று கூறினார்.

You Might Also Like

தொரப்பாடி வள்ளலார் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

வேலூரில் மாநிலந்தழுவிய ஆசிரியர்கள் சிறப்பு பேரவை கூட்டம்

செதுவாலை கன்னி அம்மன் ஆலயத்தில் குலதெய்வம் வழிபாடு

செதுவாலை கன்னி அம்மன் ஆலயத்தில் குலதெய்வம் வழிபாடு

சிறப்பு காவல் படை 15-வது அணியின் தளவாய் புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

September 6, 2024 43 Views
போகலூர் அருகே தியாகவன் சேரியில் விவசாயம்
தூத்துக்குடியில் வார்டு வார்டாக‌ குறைதீர்க்கும் முகாம்
சின்னத்துறையில் கண் பரிசோதனை முகாம்
தேமுதிக 20 ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?