திருப்பத்தூர்:ஆக:24, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் தமிழ்நாடு வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அ.மாணிக்கம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.



