சென்னை, மே- 15, இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டை மேம்படுத்த,
எச்.சி.எல் மற்றும் .ஸ்குவாஷ் ராக்கெட் கூட்டமைப்பு (எஸ்.ஆர்.எஃப்.ஐ ) உடன் இணைந்து எச்.சி.எல் புதிய ஸ்குவாஷ் போடியம் திட்டத்தை அறிவித்தது.
எச்.சி.எல் கார்ப்பரேஷன் வியூகத்தின் தலைவர் சுந்தர் மகாலிங்கம் செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத் திட்டமானது இந்திய ஸ்குவாஷில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த முனைகிறது. மேலும் விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தி உள்கட்டமைப்பை உருவாக்கி, 2028 ஆம் ஆண்டு எல்.ஏ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான அடித்ததையும் 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகள் உட்பட சர்வதேச நிகழ்வுகளில் சாதனைகள் புரிய
வீரர்களை ஊக்குவிக்கிறது என்றார்
ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களின் முழுத் திறனையும் வெளிக்கொணரும் நோக்கில், 26 முதல் 88 வரையிலான உலகத் தரவரிசை வீரர்கள் உள்ளனர். எச்.சி.எல் அவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை வழங்குவது, வரவிருக்கும் உலகளாவிய போட்டிகளுக்கு எங்கள் விளையாட்டு வீரர்களை தயார்படுத்தும் இந்த மாற்றும் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
இந்திய ஸ்குவாஷ் ரேக்கெட்ஸ் ஃபெடரேஷன் (எஸ். ஆர் எஃப்.ஐ )-ன் தலைவர் என். ராமச்சந்திரன் கூறுகையில், “உலக இரட்டையர் பட்டங்கள், காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கங்கள், மற்றும் மிக சமீபத்தில் ஐந்து போட்டிகள் உட்பட ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஸ்குவாஷ் வீரர்கள் பதக்கங்கள் பெறுவதும் எச்.சி.எல்-ன் கடந்த 10 ஆண்டு கால பணி காரணமாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.