மதுரை அக்டோபர் 19,
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57 மோதிலால் மெயின் ரோடு பகுதியில் மழைக்கால சிறப்பு நடமாடும் மருத்துவ முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டார் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, சுகாதாரக்குழுத் தலைவர் ஜெயராஜ், நகர்நல அலுவலர் மரு.இந்திரா, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.