புதுக்கடை, மார்- 19
புதுக்கடை அருகே உள்ள வண்ணான் குளம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் வெளிநாட்டில் தற்போது வேலை செய்து வருகிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன் எஸ் டி மங்காடு பகுதியை சேர்ந்த அனுவித்யா (31) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு விஷந்த் (12) விசாலன் (9) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இருவரும் முஞ்சிறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6, 4 வகுப்புகளில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு அனுவித்யா மற்றும் இரண்டு குழந்தைகளும் திடீரென மாயமானார்கள். இதை எடுத்து அவரது மாமியார் ஸ்ரீ மதி என்பவர் மருமகள் மற்றும் பேர குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார் எங்கு தேடியும் அவர்கள் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து வெளிநாட்டில் இருக்கும் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து புதுக்கடை போலீசில் ஸ்ரீமதி புகார் செய்துள்ளார். புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.