நாகர்கோவில் – ஜூன் – 10
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டென்னிசன் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் தலைவர் அருள் சிவா தலைமையில், பொருளாளர் வழக்கறிஞர் செந்தில் முருகன், செயலாளர் வழக்கறிஞர் அசாருதின், கூட்டமைப்பின் உறுப்பினர் முகம்மது சபீர் முன்னிலையில் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது.இப் பயிலரங்கத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்ட பொதுமக்களின் சட்ட அறிவை கூர்மை படுத்தும் நோக்கில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வரலாறு, பிரிவுகள், எவ்வாறு முதல் மனு எழுதுவது எவ்வாறு ஆணையத்தை அனுகுவது, தகவல்களை எளிமையாக பெறுவது எப்படி, என்பது தொடர்பாக பயிற்றுனர்களுக்கு (ஆர்.றி.ஐ) மதுரை கே. ஹக்கிம் விளக்கி கூறினார். மேலும் நிலம் தொடர்பான எண்ணற்ற விவரங்களை நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சா.மு பரஞ்சோதி பாண்டியன் கருத்துரை வழங்கி பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் சட்டத்தை பயிற்றுவித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு, இருவேளை தேனீர், எழுது பொருள்கள் இலவசமாக கன்னியாகுமரி மாவட்ட தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.