குலசேகரம் அருகே அண்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (75). இவர் ஹோட்டலில் வேலை செய்யும் தொழிலாளி. நேற்று காலை 5-30 மணியளவில் இவர் ஹோட்டலில் வேலை செய்வதற்காக அந்த பகுதியில் நடந்து சென்றுள்ளார்.
அந்தப் பகுதியில் செல்லும் போது நேற்று முன்தினம் இரவில் அடித்த சூறாவளி காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததை முன்னிட்டு, அவர் நடந்து கொண்ட பகுதியிலும் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காத கிருஷ்ணன் மின்கம்பியில் மிதித்துள்ளார். இதில் தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக குலசேகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குலசேகரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து தொழிலாளி பலி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics