குளச்சல், மே.24-
குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் (39). கூலி தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரின்ஸ் மீது பல்வேறு வழக்குகள் இருந்து ரவுடி பட்டியலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவருடைய மனைவி பிள்ளைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இதனால் பிரின்ஸ் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரின்ஸ் நேற்று காலை மதுவில் விஷத்தை கலந்து குடித்து அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவர் மயங்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்து குளச்சல் போலீசார் பிரின்சின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.