புதுக்கடை, மார்-9
புதுக்கடை அருகே வேங்கோடு வடக்கு பகுதியை சேர்ந்தவர் முருகன் (46). இவர் சொந்தமாக ஹோட்டல் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு கடன் தொல்லை அதிகமாக காணப்பட்டது. மது அருந்தும் பழக்கம் உள்ளதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, முருகன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்
இந்த நிலையில் நேற்று மாலை முருகன் வீட்டு அறையை பூட்டி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதை கண்ட உறவினர்கள் உடனடி புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இது குறித்து முருகன் மனைவி ஜெயந்தி (41) என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.