திருப்பூர்,ஏப்.24
-திருப்பூர் சிறு பூலுவபட்டி
அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால் பணம் கொடுத்து விலைக்கு குடிநீர் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு அப்பகுதி பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 20 நாட்களாகஎந்த
விதகுடிநீரும் விநியோகிக்கப்படாமல் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாளர்கள்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று 25வது வார்டு அதிமுககவுன்சிலர் தங்கராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர். காலி குடங்களுடன் ரங்கநாதபுரம் நால்ரோடு பகுதியில் மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலைபோராட்டத்தை கைவிட்டனர்.