சுசீந்திரம் மே.14
சுசீந்திரம் அருகே உள்ள வண்ணான் விளையைச் சார்ந்தவர் விஜயகுமார் 50 இவர் பிளம்பிங் வேலை செய்து வந்தார் கடந்த 8 வருட காலமாக இவர் உடல்நிலை குறைவு காரணமாக சரிவர வேலைக்குச் செல்ல முடியாமல் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார் இவரது மனைவி வேல்கனி 48 இவர் செம்பொன்கரை பகுதியில் உள்ள கயிறு கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார் சம்பவத்தன்று வேல்கனி வேலைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் விஜயகுமார் வீட்டில் மயங்கி நிலையில் வெகு நேரமாக கிடந்து உள்ளதை அக்கம் பக்கத்தினர் பார்த்து வேல்கனிக்கு தகவல் தெரிவித்துள்ளனர் உடனடியாக வீட்டிற்கு வந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு விஜயகுமாரை கொண்டு சென்றுள்ளனர் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
இதனையடுத்து வேல்கனி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.