தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தருமபுரி மாவட்ட தொழில் மையம் சார்பில் NEEDS திட்டத்தின் கீழ் ரூ 52.55இ லட்சம் மதிப்பீட்டில் ஆடை உற்பத்தி ஆலை அமைப்பதற்கான கடனு தவியினையும், மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 63- மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 53.16இ லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், தருமபுரி மாவட்டம் அரூர் மருதப்பட்டியில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் மற்றும் ரூ 2.92 கோடி மதிப்பிட்டில் 14 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், 8 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.