திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சருக்கு கங்கைகொண்டானில் வரவேற்பு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ அறிக்கை /
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று 6 ம் தேதி மற்றும் நாளை 7ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தி.மு.க தென்காசி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் கங்கைகொண்டான் சிப்காட் முன்பு காலை 10 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது எனவும், இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய , நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் திரளாக பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படும் இடத்தை வடக்கு மாவட்ட திமுகவினர் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில்
https://maps.app.goo.gl/56ZgwRMiQxj6qJtAA என்ற இணையதள வரைபட முகவரி அளிக்கப்பட்டுள்ளது