மதுரை ஜனவரி 2,
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் உடனடியாக அவர்களை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.