தேனி செப் 3:
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பரிசுத் தொகைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி இதுபோன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை பெற்று சாதனை படைக்க வேண்டும் என ஊக்கப்படுத்தி பேசினார்