திருப்பத்தூர்:செப்:12, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார் தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்களின் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமில் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட 02 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காரணம் கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். புதியதாக 37 புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக் கொண்டார்கள்.
மேலும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் இக்கோட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.