தஞ்சாவூர் ஏப்ரல் 22
தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி கீழ் ரூபாய் 75.70 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள், கட்டிடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்.
பிள்ளையார்பட்டி ஊராட்சி பாலகிருஷ்ணா நகர், மாதா கோட்டை இந்திரா நகரில் தலா ரூபாய் 16 லட்சம் மதிப்பில் மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளும், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி காவேரி நகரில் ரூபாய் 12.70 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டட மும், தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் ரூபாய் 15 லட்சம் மதிப்பி ல் காவிரி கூட்டுறவு அங்காடி கட்டடமும் என மொத்தம் ரூபாய் 75.70 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன்,டிகேஜி நீலமேகம், மேயர் சண். ராமநாதன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், மாநகராட்சி ஆணையர் கண்ணன் சதயவிழாக்குழு தலைவர் செல்வம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.