புதுக்கடை, மார்- 22
கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்குளம் பேரூராட்சி பகுதியான கீழ்குளம் சந்திப்பு மற்றும் விழுந்தயம்பலம் பகுதிகளில் வெப்ப சலனத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதையடுத்து, பேருராட்சி சார்பில் தண்ணீர்ப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கீழ்குளம் ஜங்ஷனில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை பேரூராட்சி தலைவர் சரளா கோபால் தலைமையில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரகுநாதன் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் மற்றும் ஒன்றிய திமுக செயலாளர் கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு குடிநீர் மற்றும் ORS கரைசல் வைக்கப்பட்டுள்ளது.