தருமபுரி மே. 13
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் பூக்கடை ரவி ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் தலைமையில் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். ஆர். வெற்றிவேல், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பழனிச்சா மி, நகர செயலாளர் பூக்கடை ரவி, அசோகன், தகடுர் விஜயன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.