கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மன்னன்பந்தல் கிராம நிர்வாக அலுவலரான திருமலைசங்கு என்பவரை காரணமின்றி பணியிட மாறுதல் செய்ததை ரத்து செய்யக் கோரியும், இதுநாள்வரை கோரிக்கை நிறைவேற்றப்படாததை கண்டித்தும், ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியரைக் கண்டித்தும் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வாயிலில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில துணைத்தைவர் ஜான்போஸ்கோ தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள 200 ற்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.