முன்விரோதம் காரணமாக விஸ்வகர்மா சேவை மைய தலைவர் மீது தாக்குதல்.
விசிக மாநகரக் கழக செயலாளர் அல்காலித் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.
நாகர்கோவில் – அக்- 02,
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக விஸ்வகர்மா சேவை மையத்தின் தலைவர் சந்திரன் தாக்கப்பட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் தனக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும்,கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், என்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என படுத்தபடுக்கையாக சிகிச்சையில் இருக்கும் சந்திரனை சம்பவம் அறிந்து அவரிடம் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்க்காக மருத்துவமனைக்கு சென்ற விடுதலை சிறுத்தை கட்சி மாநகர கழக செயலாளர் அல்காலித்திடம் விஸ்வகர்மா சேவை மைய தலைவர் சந்திரன் வேதனைப்பட கூறினார். எனவே சம்பவம் குறித்து கோட்டார் காவல்நிலைய காவல்துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகரம் சார்பில் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக மாநகரக் கழக செயலாளர்.அல்காலித் அறிவித்துள்ளார்.