மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொளிக் காட்சி வாயிலாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கிருஷ்ணகிரியில் ரூ.1 கோடியே 50 இலட்சம் மதிப்பில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டிட கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சி, ராசீவீதி, அருள்மிகு பிரசன்ன பார்வதி சமேத சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.1 கோடியே 50 இலட்சம் மதிப்பில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன் உதவி ஆணையர் .ராமுவேல், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் .ரஜினி செல்வம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



