நாகர்கோவில், ஜன. 14 –
ஆரல்வாய்மொழியில் உள்ள மறைசாட்சி தேவசகாயம் மவுண்ட் அண்மையில் திருத்தலமாக தரம் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே மறைசாட்சி தேவசகாயம் புனிதர் பட்டம் பெற்றார். தற்போது இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கொண்டாடும் விதமாக வாடிகன் போப்பின் தூதுவர் பேராயர் லியோ போல்டோஜி ரல்லி என்பவர் வருகிற 14-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை கோட்டார் மறைமாவட்டாயர் நரேன் சூசை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புனிதரும் மறைசாட்சியுமான தேவசகாயம் புனிதராக அறிவிக்கப்பட்டு மிகப்பெரிய விழா குமரி மண்ணிலும், ரோமிலும் கொண்டாடப்பட்டது. தற்போது போப் 14ம் லியோ இந்திய நாட்டின் பொது நிலையினரின் பாதுகாவலராக புனித தேவசகாயத்தை அறிவித்துள்ளார். இதனை நாளை 14-ம் தேதி புனித தேவசாகாயம் வாழ்ந்து உயர்த்தியாகம் செய்த மண்ணில் வாடிகன் 14ஆம் லியோ தூதர் அறிவிக்க உள்ளார். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கின்ற விழாவில் பேராயர்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட் சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர், இறை மக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது திருத்தல அதிபர் பங்கு பணியாளர் லியோன், மறைமாவட்ட செயலாளர் உட்பட பல கலந்து கொண்டனர். போப் தூதர் வருகை தர இருப்பதை முன்னிட்டு ஆரல்வாய்மொழி தேவசாயம் மவுண்ட் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.



