சூலூர் மே. 13
சூலூர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம். ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம். கோயமுத்தூர் சூலூர் தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரன் ஆலயம் மூன்றாண்டுகள் திருப்பணியை தொடர்ந்து கடந்த 04/05/2025 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு முதல் பிரதோஷம் மகா சனி பிரதோஷமாக அமைந்திருந்தது.
இதனால் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருகை தந்தனர். நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சிவாய நம என கோசத்துடன் திருவாசகம் பாட நந்தி வாகனத்தில் சிவபெருமான், அம்பிகை அமர்ந்து திருக்கோவிலை மூன்று முறை வலம் வந்து தீபாரணை நடைபெற்றது.