சிவகங்கை: பிப்:22
சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி 168 – ஆண்டுகளைக் கடந்து. சிவகங்கை மன்னர்களால் தொடங்கப்பட்ட பாரம்பரியமான மன்னர் மேல்நிலைப்பள்ளியானது இன்றும் புதுப் பொலிவுடன் சிறப்பாக
செயல்பட்டு வருகிறது . இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவானது பரம்பரை அறங்காவலர் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் நிரந்தர தலைவர் கல்வி முகவாண்மைக் குழு , மன்னர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிர்வாகி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் தலைமையில் நடைபெற்றது . பள்ளிக்குழு மன்னர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மகேஸ்துரை முன்னிலை வகித்தார் .
மன்னர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் வி .எஸ். குமரகுரு வரவேற்றுப் பேசினார் . விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவிகள் மற்றும் பல்துறைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ். கௌரி பரிசுகளை வழங்கி கௌரவித்தார் . இவர் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார் . அதனைத் தொடர்ந்து இந்திய சுதந்திரப் போரில் பெரும் பங்காற்றிய , கப்பலோட்டிய தமிழன் என புகழப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் பேரன் சி.வா. சிதம்பரம் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பள்ளியை பாராட்டிப் பேசினார் . இதன் பின்பு சிவகங்கையில் செயல்படும் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளியை வாழ்த்திப் பேசினார்கள் . இதற்கு முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் என் . சுந்தரராசன் ஆண்டறிக்கை வாசித்தார் . கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து விழாவின் நிறைவில் முதுகலை ஆசிரியர் சி.பிரபாகரன் நன்றி கூறினார் .