திருச்செந்தூர்
தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்
பண்ணையார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆலோசகர் வன்னியபெருமாள் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அருணாச்சலம் இணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஆலோசகர் பழனி ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தெற்கு மாவட்ட தலைவர் V.M.வேலாயுத பெருமாள் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மண்டல தலைவர் R.கோடீஸ்வரன் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் மண்டல மாநாடு திருச்செந்தூரில் சிறப்பாக நடத்துவது எனவும் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிய சங்கங்களை ஒருங்கிணைத்து செயல்படுவது எனவும் மேலும் அனைத்து பகுதிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்வின் போது தெற்கு மாவட்டத்தில் இருந்து அனைத்து பகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிறைவில் மாவட்ட செயலாளர் சேக் முகமது நன்றியுரையாற்றினார்.