களியக்காவிளை, எப் – 14
களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதி அதங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் நேசமணி (42). இவர் டியூஷன் ஆசிரியர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சந்தோஷ்குமாரின் சகோதரர் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சந்தோஷ்குமார் போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள அறையில் சந்தோஷ்குமார் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து உடனடியாக களியக்காவிளை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் இறந்த சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமார் எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.