தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தியாவின் முதுபெரும் தலைவரும், 5 முறை தமிழ்நாடு முதலமைச்சராகவும் திமுக கழகத்தின் தலைவராக சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றிய கலைஞர் கருணாநிதி 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு , பரமகுரு மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட துணை செயலாளர் புனிதா ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபண்டியன் பெரியதுரை நகரச் செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ் புளியங்குடி மேற்கு நாகூர் கனி, தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், நகர அவை தலைவர் முப்பிடாதி, முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் முனியசாமி, நகர துணைச் செயலாளர் முத்துக்குமார், சார்பு அணி அமைப்பாளர்கள் நெசவாளர் அணி சந்திரன், மாணவர் அணி உதயகுமார், தொண்டரணி அப்பாஸ், மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, சார்பு அணி துணை அமைப்பாளர்கள் இலக்கிய அணி அபூபக்கர், சிறுபான்மையினர் அணி மரியலூயிஸ்பாண்டியன், இளைஞர் அணி ராஜராஜன், ராஜ், கார்த்தி, வார்டு செயலாளர்கள் வாழைக்காய்துரைபாண்டியன், பழனிச்சாமி, ராமலிங்கம், வீரா, தொமுச சங்கரன்கோவில் கிளைச் செயலாளர் சங்கர்ராஜ், ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி, கிளைச் செயலாளர் மணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராசா என்று ராசையா மற்றும் நிர்வாகிகள் தொண்டரணி ராஜவேல்ரத்தினம், வெள்ளத்துரை, மணி, ஜெயக்குமார், பாலாஜி, ஜான்சன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவிலில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு மாலை அணிவித்து மரியாதை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics