வேலூர் 23
போக்குவரத்து நெரிசல் குறைக்கும் சோதனை ஓட்டம். சோதனையில் முடிந்ததால் பொதுமக்களிடையே சலசலப்பு.
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதன் காரணமாகவும் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதன் காரணமாகவும்
வேலூர் மாநகரத்தில் உள்ள பிரதான சாலையான கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 15 நிமிடத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் பேரி கார்டை அகற்றி ஒரு வழி சாலையில் வாகன வரக்கூடிய எதிர் திசையில் ஆபத்தை உணராமல் வாகனத்தை இயக்கி வந்தனர்
இதை கண்ட காவல்துறையினர் போக்குவரத்து சோதனையை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டது இதனால் சிறிது நேரம் வேலூர் மாநகரமே போக்குவரத்து நெருசலில் காணப்பட்டது.
மேலும் சோதனை ஓட்டம் என்றால் வரைபடத்தை வைத்து சோதனை செய்து அதுசார்ந்து களப்பணி ஏதும் இன்றி தான்தோன்றித்தனமாக போக்குவரத்து மாற்றம் செய்தது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது
எப்போதும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சாலைகள் அனைத்தும் வெளிச்சோடி காணப்படும்
ஆனால் நேற்று சோதனை போக்குவரத்து மாற்றத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் வேதனை
மேலும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர் .