செங்கல்பட்டு -03
செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனை கூட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேளவளம் பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தை செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு சேர்ந்த சுரேஷ் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் முனியாண்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி ராஜன் செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் மாவட்ட பொருளாளர் ரஞ்சித் குமார் மாவட்ட சட்ட ஆலோசகர் சந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தீர்மானங்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கோடைகால குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழக முதல்வர் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தமைக்கு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர் தமிழக அரசின் கலைஞர் கனவு இல்ல திட்ட மூலம் குடிசைகள் இல்லா கிராமங்களாக மாற்ற முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கு கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன் கோடை காலங்களில் ஆடு, மாடு மற்றும் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்காக நீர் சேமித்தலை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக என் ஜி என் ஆர் இ ஜி ஏ திட்டத்தின் மூலம் குளங்கள் அமைக்க பணி ஆணை வழங்கி நமக்கே மாவட்ட கூட்டமைப்பு சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளனர் மேலும் வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருத்தணி திருப்பத்தூர் தென்காசி திருநெல்வேலி கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சிகளையும் 2019 நடைபெற்ற 27 மாவட்ட ஊராட்சிகளின் பதவிக்காலம் முடியும்போது முயல் குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து ஒரே கட்டமாக தேர்தல் நடத்த உள்ளதாக வரும் செய்திகள் அடிப்படையில் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி மன்றங்களை கலைக்க வேண்டாம் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து பேசுவதென மாவட்ட கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தற்போது உள்ள ஒன்பது மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஐந்து ஆண்டுகள் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் 359 ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட கூட்டமைப்பு ஒத்துழைப்பு அளித்து மாநில கூட்டமைப்பு மூலம் எந்த நடவடிக்கைக்கும் உள்ளாட்சி மன்றங்களை கலைக்க வேண்டாம் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து பேசுவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த கூட்டமைப்பில் இறுதியாக செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு தலைவர் ஏ .சி .சுரேஷ் நன்றியுரை கூறினார்



