கிருஷ்ணகிரி, மார்ச்.19- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பணபள்ளி பேருந்து நிலையம் பயன்பாட்டில் இல்லாததால் புனரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் நவ்ஷாத் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.முன்னதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: வேப்பனப்பள்ளி பேருந்து நிலையம் அப்போதைய இருந்த போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு வருடம் மட்டும் செயல்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா காலத்தில் பேருந்து நிலையம் மூடப்பட்டது.பேருந்து நிலையம் இன்று வரை செயல்படாமல் அப்படியே உள்ளது. அந்த பேருந்து நிலையம் பழுதடைந்து சுகாதாரமற்ற நிலையில் இருந்து வருகிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி உள்ளது. பழுதடைந்து உள்ள வேப்பனப்பள்ளி பேருந்து நிலையத்தை புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்கள் மாநில த்தின் தலைவரிடம் ஆலோசனை பெற்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக கூறினார். நிர்வாகிகள் அன்சர்,மாவட்ட செயலாளர் முகமது உமர்,சயத் நவாஸ்,சர்தார்,அயூப், ஓசூர் நகர செயலாளர் அப்சல் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.



