ஈரோடு பிப் 16
தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணை தலைவரும் முன்னாள் எம்எல்ஏவு மான் விடியல் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
ஈ.ரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் அல்லைகிராமம் ஊராட்சி பகுதி ராமலிங்கபுரம் பகுதியில் இடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து விவசாயிகளின் ஆடுகளை நாய்கள் கடித்து வெறித்தனமாக இரத்தம் குடித்து கொன்று விட்டது. அதை கண்டித்தும், இந்த கொடிய சம்பவத்தை தடுக்க கோரியும், உரிய இழப்பீடு கேட்டும் சாலை மறியல் செய்த விவாயிகனை தமிழக அரசு கைது செய்துள்ளது மிகவும் கண்டிக்கதக்கது.
இதே போன்ற சம்பவம் காங்கயம் பகுதியில் திட்டம்பாளையம். சிவன்மலை, ஆலாம்பாடி. ஊதியூர் பகுதிகளிலும் கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறி உள்ளது. இதற்கு உரிய இழப்படு வழங்க வேண்டிய அரசு விவசாயிகளை கைது செய்தது மிகவும் வேதனை அளிக்கிறது. கைது செய்த விவசாயி களை விடுதலை செய்ய வேண்டும். உடனே இது குறித்து அமைச்சர் தலையிட்டு பேசி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவதுடன் இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.