மதுரை ஜூன் 24,
மதுரை மாநகரில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களின் குழந்தைகள் 134 பேருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் 2022 – 2023 ஆண்டிற்கு தமிழ்நாடு காவலர் நிதியிலிருந்து (TNPBF) வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் அதிகாரிகள், காவலர்கள் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் கலந்துகொண்டனர்.