டிச. 11
தேமுதிக திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் விசைத்தறி பி.ஆர் குழந்தைவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
மக்கள் விரோத திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு வரிகளை கடுமையாக உயர்த்தி பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்கள் விரோத திமுக அரசின் வழியில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும் சொத்துவரி, குடிநீர் கட்டணவரி, தொழில் வரி, பழைய கட்டிடங்களை மறு ஆய்வு செய்து புதிய வரிகள் விதிப்பு, வணிக பயன்பாட்டிற்கான கட்டிடங்களுக்கு 18% ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளது . உயர்திய வரிகளை கண்டித்தும், குறைக்க வலியுறுத்தி தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர்
பிரேமலதா விஜயகாந்த் ஆனைக்கிணங்க திருப்பூர் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஏற்கனவே திருப்பூர் தொழில் துறையினர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் சூழலில் புதியதாக உயர்த்தபட்டுள்ள அனைத்து வரிகளை குறைக்க வலியுறுத்தியும், வியாபாரிகள் தொடர்ந்து கடை நடத்த முடியாத நிலையை கண்டித்தும் வரும் 18-ம் தேதி திருப்பூரில் முழுகடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பாக முழு அதரவு அளிக்கிறது.