திருப்புவனம்
அக்டோபர் 14
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பெத்தானேந்தல் ஊராட்சியில் மயான கரைக்கு செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு பயனற்ற வகையில் குளியல் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் பெத்தானந்தல் ஒத்த வீடு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் இறந்தவர்களை வாகனங்களில் கொண்டு சென்று அடக்கம் செய்ய மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ராமேஸ்வரி முனியாண்டியிடம் பலமுறை கூறியும் அவர் இதனை கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது.
மேலும்
மயான கரைக்கு செல்லும் பாதையில் கட்டப்பட்டு வரும் இந்த குளியல் தொட்டி பணியை தடுத்து நிறுத்தி பொது மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் மாற்று இடத்தில் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.