தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம், சைதாப்பேட்டை, சின்னமலை நியாய விலைக் கடையில் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம்,குமாரகிரி ஊராட்சி,கூட்டாம்புளி நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ் ,மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா ஆகியோர் உள்ளனர்.



