நாகர்கோவில் மார்ச் 27
கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே உள்ள அழிக்கால் பிள்ளைத் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜிலின் ரோமாரியோ. இவருடைய தாயாரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த போது ஒரு பிளஸ்-2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.பின்னர் அஜிலின் ரோமாரியோ பெற்றோரிடம் சொல் லாமல் வீட்டைவிட்டு வெளியேறி மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி தனியாக வீடு வாடகை எடுத்து தங்கியிருந் துள்ளார். அப்போது ஒரு நாள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாணவியின் பெற்றோர்,அஜி லின் ரோமாரியோவை தனியாக வீடு எடுத்து தங்க வைத் துள்ளனர். இதுகுறித்து மாணவி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜிலின் ரோமா ரியோவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மாணவியின் பெற்றோர் மாணவியின் தந்தை முத்துகுமார் தாய் ராமலெட்சுமி சித்தி நித்யா ஆகிய மூவரையும் கைது. செய்தனர். பின்னர் அவர்
களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அஜிலின் ரோமாரியோவை காண வில்லை எனக்கூறி அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். இந்தநிலையில் அவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய் திருப்பதும் குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே மாணவி இதை போல் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து பின்பு அவர் மீது புகார் கொடுத்து மகளிர் போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் மாணவியை எச்சரித்து அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.



