தென்காசிஏப் 4
கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பு தாரர்களிடம் வாடகை வசூல் செய்ய அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டம்
கடையநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கி வருவது ஸ்ரீ உண்ணாமலை சமேத ஸ்ரீ அண்ணாமலை நாதர் திருக்கோவில் இந்த கோவிலுக்கு என சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் நஞ்சை புஞ்சை நிலங்கள் மட்டுமின்றி நகரத்தின் மையப் பகுதியில் கடைகள் சத்திரங்கள் என ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளன இந்த நிலையில் நகரை சுற்றி மட்டுமின்றி நகரத்திற்கு மையப்பகுதியிலும் மேற்கண்ட கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் இருப்பதினால் இந்த சொத்துக்களின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது இந்த நிலையில் இந்த கோவிலின் அறங்காவலராக பதவி வகித்துவந்த சுப்பிரமணி ஐயர் என்பவர் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் தெரியாமல் தானே தீர்மானம் நிறைவேற்றி முறைகேடாக கடையநல்லூர் அட்டக்குளம் புரவில் 3—93 ஏக்கர் நஞ்சை நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து கசுமார் 80-க்கும் மேற்பட்ட வர்களிடம் விற்பனை செய்து விட்டார் இந்நிலையில் இவரது தவறான செயலுக்கு பக்தர்கள் மட்டுமின்றி இந்து அமைப்பினர் பலருக்கும் கோபத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அண்ணாமலை நாதர் ஆலய மீட்பு குழு என்ற அமைப்பை உருவாக்கிய ஆலய மீட்புக்குழு மீண்டும்கோவில் நிலத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க கோரி தென்காசி முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவில் நிலத்தை முறைகேடாய் பெற்றது செல்லாது எனவும் அது போன்று நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருந்தால் உடனே காலி செய்யவும் உத்தரவிட்டது இது எடுத்து அட்டக்குளம் தொடரில் முறைகேடாக பொது இடத்தில் எடுத்ததாக கூறி சுமார் 81 ஆக்கிரமிப்பாளர்கள் நஞ்சை நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தனர் அவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அப்போதைய கோவில் இணை ஆணையர் அன்புமணி இந்து சமய அறநிலை துறை சட்டம் கீழ் நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு காலி செய்ய வேண்டுமென தெரிவித்ததுஆனால் இதை எதிர்த்து தென்காசியை சேர்ந்த ஊடன் முகைதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கிலும் அப்போதைய நீதிபதி பரத சக்கரவர்த்தி கீழமை நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பின் சாரம்சத்தை உறுதி செய்து தொடர்ந்து ஆக்கிரப்பு என்ன செய்து கோவிலில் குடியிருந்து வருபவர்களை உடன் காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்த உத்தரவிட்டார் இதை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு காரர்களை உடன் காலி செய்ய வலியுறுத்தி வந்தனர் எதற்கும் வளைந்து கொடுக்காத ஆக்கிரமித்துக்காரர்கள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து வந்தனர் இந்நிலையில் கடையநல்லூரைச் சேர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் என்பவர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அவமதிப்பு செய்ததாக அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், மரியா கிளாடி அமர்வில் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க நீதிமன்றம் ஒரு போதும் அனுமதிக்காது மேலும் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி குடியிருப்பவர்களிடம் உடனடியாக வாடகை வசூலிக்கவும் தவறும் பட்சத்தில் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமித்துக்காரர்களை அப்புறப்படுத்தி அவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீண்டும் கோவில் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டனர் மேலும் இந்த வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கடையநல்லூர் அண்ணாமலை நகர் கோவில் நிலங்கள் முறைகேடுகளாக விற்பனை செய்த விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய அதிரடி தீர்ப்பால் அட்டகுளம் புரவில் கோவில் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பலர் கடும் கலக்கத்தில் உள்ளனர்
கோவில் நிலம் முறைகேடாக வாங்கியவர்கள்
You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics