கன்னியாகுமரி டிச 20
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், முதலமைச்சரின் செயலாளர் மரு.சண்முகம், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலளர் மன்கத் ராம் சர்மா, நெடுஞ்சாலைகள் துறை அரசு செயலாளர் மரு.செல்வராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன். செய்தித்துறை அரசு செயலாளர் ராஜராம், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஆகியோர் முன்னிலையில் நேற்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு. தெரிவிக்கையில்;-
தமிழ்நாடு முதலமைச்சர் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் கொண்டாட அறிவுறுத்தியுள்ளார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயனை நியமித்துள்ளார்கள் அனைத்து துறைகளும் ஒன்றிணைத்து இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்த உள்ளோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் 29.12.2024 அன்று தூத்துக்குடிக்கு வருகை புரிந்து அங்கு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மறுநாள் 30.12.2024 அன்றும் காலை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, நம்முடைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மதியம் வருகை புரிய உள்ளார்கள். அதனைத்தொடர்ந்து முதல் நிகழ்ச்சியாக நெடுஞ்சாலை துறை சார்பில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேசைணந்தர் பாறை இணைக்கும் கண்ணாடி கூண்டு இழை பாவத்தினை திறந்து வைத்து விட்டு, பிறகு அய்யன் திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள்.
அதனைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக வளாகத்தின் அருகில் அமைந்துள்ள ஒலி மற்றும் ஒளி காட்சிக்கூடம் திறந்து வைத்து பார்வையிட உள்ளார்கள். அதன்பின் சுகி சிவம் பட்டிமன்றத்தினை காண உள்ளார்கள். மறுநாள் 31.12 2024 அன்று காலை அய்யன் திருவள்ளுவர் குறித்த புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டுவார். அதன் பின் அய்யன் திருவள்ளுவர் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். பின்னர் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கத்தில் கலந்து கொள்வார்கள். கருத்தரங்கம் முடிந்த பிறகு உணவு இடைவேளை பின் மாலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து 01.01.2024 அன்று மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.
அய்யன் திருவள்ளுவர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற சென்னையில் தமிழ்நாடு அரசு தலைை செயலளார் என்.முருகானந்தம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு துறைகளும் என்னென்ன பணியை மேற்கொள்ள வேண்டும் என்று நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தலைமை செயலாளருக்கு ஆணையிட்டு உள்ளார்கள். ஒதுக்கப்பட்ட பணிகளை ஒவ்வொரு துறைகளும் சிறப்பாக மேற்கொள்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய தான் அந்தந்த துறையை சார்ந்த செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இன்றைய தினம் வருகை புரிந்து களஆய்வு மேற்கொண்டார்கள். அந்த வகையில் பொதுப்பணித்துறை சார்பாக பந்தல் மற்றும் மேடை அமைப்பது மற்றும் இருக்கைகள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறை இணைக்கும் கண்ணாடி கூண்டு இழை பாலத்தின் தரைத்தளப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் சுற்றுலாத்துறை சார்பாக ஒலி மற்றும் ஒளி காட்சிக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளும் இணைந்து அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டோம் என்றால் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வுகளில் செய்தித்துறை இயக்குநர் மரு.வைத்தியநாதன், சுற்றுவா இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ். இயக்குநர் (நினைவகங்கள்) கு.தமிழ்செல்வராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம்,முன்னாள் அமைச்சர் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் பிராசாந்த் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா,பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீண, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.