கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமல்பட்டியில் மத்தூர் ஒன்றிய செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஆர் கே நரசிம்மன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தில் இந்தி மொழியை கட்டாயம் திணிக்கிறது இது மாநில அரசை நிர்ப்பந்தம் செய்வதாகும் இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும் இந்த நிலை தொடர்ந்தால் தமிழக அரசு சார்பில் கூட்டணி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இந்தி எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் அங்குள்ள பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் சாமல்பட்டி நிர்வாகிகள் சேகர் காதர் புகழேந்தி லயோலா ராஜசேகரன் முனுசாமி ஆசைத்தம்பி கோபி காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட பொது செயலாளர் மனோகரன், சசிகுமார், கோவிந்தராஜ், வினோத்குமார், ஜெகதீசன் ,சரவணன், சந்திரபாலு ,மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்