பரமக்குடி,மே.26 : பரமக்குடி அருகே இணைபிரியாமல் வாழ்ந்த தனது மனைவி இறந்த சோகத்தில்,மனைவியின் உடல் மீது சாய்ந்து உயிரை விட்ட கணவர். இறப்பிலும் இணைபிரியாத வயதான தம்பதியரின் இறப்பு சம்பவம் இந்தப் பகுதியில் உள்ள கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் சூசையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவப்பாண்டி (86) இவரது மனைவி அமராவதி (82) இவர்களுக்கு இரண்டு மகன்கள், 3 மகள்கள் உள்ள நிலையில் அனைவரையும் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அமராவதி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மனைவி இறந்த சோகத்தில் இரவு முழுவதும் சோகமாக கேசவப்பாண்டி . நேற்று காலை தனது மனைவியின் உடல் அருகே சென்று மனைவியை பார்த்து அழுதவர் மயங்கி அவர் மீது விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி பார்த்த போது உயிர் பிரிந்த நிலையில் இருந்தார். தனது மனைவி இறந்த சோகத்தில் கணவன் தனது மனைவியின் மீது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தினாலும், வயதான காலத்திலும் ஒன்றாக இருந்தவர்கள் இறப்பிலும் இணைபிரியாமல் இருந்தது அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தம்பதியினர் இப்படித்தான் வாழ வேண்டும் என எடுத்துக்காட்டாக வாழ்ந்த தம்பதியினரை மயானத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.
படம்
கேசவப்பாண்டி
அமராவதி