தஞ்சாவூர் ஏப்ரல் 2
தஞ்சாவூரில் ரூபாய் 3.66கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட இராஜ ராஜ சோழன் மணிமண்டபம் திறப்பு விழா நடந்தது.
இதை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்து பேசியதாவது
தஞ்சாவூரில் 1994 -95 ஆம் ஆண்டு களில் கட்டப்பட்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் மணி மண்டபம் அதன் பிறகு புதுப்பிக்கப் படாமல் பாதுகாக்கப்படாமல் இருந்தது. தமிழக முதல்வரின் உத்தரவுப்படி இந்த மணிமண்டபத் தில் புதுப்பித்தல் மற்றும் மேம்படுத் துதல் ரூபாய் 3.66 கோடியில் மேற்கொள்ளப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப் பட்டுள்ளது .இதில் மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு வர்ணம் பூசுதல், மேற்கூரை பழுதுபார்த்தல், அருங்காட்சியகத் தின் வெளிப்புற சுவர் மின் கசிவிலிருந்து பாதுகாத்து தடுத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன .இதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித் துக் கொள்கிறோம் என்றார் அமைச்சர்
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தாவது
தனியார் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தாது, வருகைப் பதிவு பற்றாக்குறை குறித்து ஒரிரு மனுக்கள் எங்கள் பார்வைக்கு வருகின்றன. கல்லூரி கல்வி இயக்குனர், மண்டல இயக்குனர் மூலம் தொடர்புடைய கல்லூரி களில் பேசப்பட்டு, உரிய நடவடிக் கை எடுக்கப்படுகிறது சில மாணவர்களின் வருகை பதிவு மிக குறைவாக இருப்பதால், அவர்களி டம் கூடுதலான நாட்கள் கல்லூரி க்கு வர வேண்டும் என அறிவித்து ள்ளோம் என்றார் அமைச்சர் விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகர ன் , டி கே ஜி நீலமேகம் ,மேயர் சண் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.