நாகர்கோவில் ஆக 8
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மலர் சந்தைகளில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூச்சந்தை அன்னியச் செலவாணியை ஈட்டி தரும் வர்த்தக மையமாக இருந்து வருகிறது. நிலக்கோட்டை திண்டுக்கல் பெங்களூர் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினசரி பல டன் கணக்கில் பூக்கள் தோவாளை பூ சந்தைக்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து உள்ளூர் வியாபாரம் மட்டுமல்ல கேரளாவிலும் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பூக்கள் செல்கின்றன அது மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் தினசரி பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் அன்னியச் செலவாணியை ஈட்டி தரும் வர்த்தக மையமாக தோவாளை பூசந்தை விளங்கி வருகிறது. பண்டிகை காலங்கள், விசேஷ காலங்கள், சுபமுகூர்த்த காலங்களில் பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் கடந்த வாரம் வரை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ நேற்று வெறும் 350 ரூபாயாக கடுமையாக விலை சரிவு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல 2500 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ 350 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்ற கனகாம்பரம் 300 ரூபாயாகவும், 2500 ரூபாய்க்கு விற்ற முல்லை பூ வெறும் 175 ரூபாயாகவும், 500 ரூபாய்க்கு விற்ற கொழுந்து 170 ரூபாயாகவும், 600 ரூபாய்க்கு விற்ற சிவந்தி பூ 150 ரூபாயாகவும் இப்படி அனைத்து பூக்களுமே மூன்று மடங்கு 4 மடங்கு விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் வியாபாரம் மந்தமாகி உள்ளது. இதனால் தோவாளை பூ வியாபாரிகளும் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர் பூ சந்தையும் வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.