பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியம், பாண்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணி நிமிர்த்தமாகவும் தினமும் பரமக்குடி சென்று வருகின்றனர். இவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூடுதல் பேருந்து வசதி வேண்டி பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ வின் முயற்சியால் நேற்று, புதிய பேருந்தை பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார்.
உடன், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமரகுரு, பரமக்குடி போக்குவரத்து கிளை மேலாளர் ரத்தினம்,ஒன்றிய செயலாளர்கள் சக்தி, அண்ணாமலை, குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்எம்டி அருளானந்த், பூமிநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் திலகர், ஒன்றிய திமுக நிர்வாகி கணேசன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்
பரமக்குடி பேருந்து நிலையத்தில் பாண்டியூருக்கு புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார்.