3வது புத்தக கண்காட்சி முன்னிட்டு “திருவாரூர் வாசிக்கிறது” நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்ட புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகரில் எதிர்வரும் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 02 வரை நடைபெறவுள்ள 3வது புத்தக கண்காட்சி முன்னிட்டும், இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள், தமிழ் கவிஞர்களின் புத்தகங்களை வாசிப்பதனை ஊக்குவிக்கும் வகையிலும், “திருவாரூர் வாசிக்கிறது” என்ற தலைப்பில் அனைத்து நூலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்தவகையில், திருவாரூர் மாவட்ட விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் “திருவாரூர் வாசிக்கிறது” ;நிகழ்வின் கீழ் புத்தகம் வாசிப்பதனை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.