கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்களில் 8,000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் 90 நாட்களுக்கு இரண்டாம் போக விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் .ஒய்.பிரகாஷ், ஒசூர் மாநகராட்சி மேயர் .எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 8,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் முதல் மண்டலத்திற்கு 5 நாட்கள் மற்றும் இரண்டாவது மண்டலத்திற்கு 5 நாட்கள் என மொத்தம் 10 நாட்களுக்கு தண்ணீர் விட்டும், 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், தவணை ஒன்றுக்கு 72.60 மில்லியன் கன அடி வீதம் மொத்தம் 457.58 மில்லியன் கன அடி தண்ணீர் சுழற்சி முறையில் 6 தவணைகளாக 26.02.2025 முதல் 26.05.2025 வரை மொத்தம் 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலம் 5918 ஏக்கரும், வலதுபுற பிரதான கால்வாய் மூலம் 2082 ஏக்கர் என மொத்தம் 8000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயனடைகின்றன.
இதன் மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்திலுள்ள, தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்த முத்தாளி, முத்தாளி, அட்டூர், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன்தொட்டி, தின்னூர், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்னகொல்லு, பெத்தகொல்லு, சாமனப்பள்ளி, சென்னத்தூர், அட்டகுறுக்கி, நல்லகானகொத்தப்பள்ளி மற்றும் மார்த்தாண்டப்பள்ளி ஆகிய 22 கிராமங்களில் உள்ள 8,000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும்.மேலும், அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர் வரத்து ஆகியவைகளை கருத்தில் கொண்டு, 90 நாட்களுக்கு சுழற்சி முறையில், முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும் அடுத்த 5 நாட்கள் நிறுத்தியும் 6 நனைப்புகளுக்கு நீர் வழங்கப்படும். தண்ணீர் திறந்துவிடப்படும் காலங்களில் இரு கால்வாய்களிலும் (வலதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு: 26 க.அடி/வினாடி மற்றும் இடதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு: 62 க.அடி/வினாடி) என மொத்தம் 88 கன அடி / வினாடி வீதம் திறந்து விடப்படும்.
அணையின் மொத்த நீர்மட்டம் 44.28 அடி, அணையின் முழு கொள்ளளவு 481 மி.க.அடி, அணையின் இன்றைய நீர்மட்டம் (26.05.2025) 40.67 அடி, அணையின் இன்றைய கொள்ளளவு 353.76 மி.க.அடி ஆகும்.
எனவே, விவசாய பெருமக்கள் நீர் பங்கீட்டில் நீர்வளத்துறையினருடன் ஒத்துழைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக விளைச்சல் பெறும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா, . நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் .மோகன்ராஜ், உதவி பொறியாளர்கள் .சிவசங்கர், .அஜெய்ஷா, வட்டாட்சியர் .சின்னசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் .குமரேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் .சுந்தரமூர்த்தி மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.