தென்தாமரைகுளம்., நவ. 2.
நவம்பர் 1, கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள். இந்த இணைப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் நினைவிடத்தில் மலர் மாலை சூடி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இந்து முன்னணி மாநில பேச்சாளர் அசோகன் , மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.